?????
Sorah Al-Mursalat ( Those sent forth ) - Verses Number 50
وَالْمُرْسَلَاتِ عُرْفًا 
( 1 )  
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக
فَالْعَاصِفَاتِ عَصْفًا 
( 2 )  
வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
وَالنَّاشِرَاتِ نَشْرًا 
( 3 )  
(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
فَالْفَارِقَاتِ فَرْقًا 
( 4 )  
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا 
( 5 )  
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
عُذْرًا أَوْ نُذْرًا 
( 6 )  
(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ 
( 7 )  
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
فَإِذَا النُّجُومُ طُمِسَتْ 
( 8 )  
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ 
( 9 )  
மேலும், வானம் பிளக்கப்படும் போது-
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ 
( 10 )  
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ 
( 11 )  
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ 
( 12 )  
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
لِيَوْمِ الْفَصْلِ 
( 13 )  
தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ 
( 14 )  
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 
( 15 )  
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ 
( 16 )  
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ 
( 17 )  
பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ 
( 18 )  
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 
( 19 )  
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ 
( 20 )  
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ 
( 21 )  
பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ 
( 22 )  
ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ 
( 23 )  
இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 
( 24 )  
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا 
( 25 )  
பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
أَحْيَاءً وَأَمْوَاتًا 
( 26 )  
உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا 
( 27 )  
அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 
( 28 )  
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ 
( 29 )  
"நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ 
( 30 )  
மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.
لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ 
( 31 )  
(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ 
( 32 )  
நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ 
( 33 )  
நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 
( 34 )  
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ 
( 35 )  
இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ 
( 36 )  
அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 
( 37 )  
பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ 
( 38 )  
இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ 
( 39 )  
எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 
( 40 )  
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ 
( 41 )  
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ 
( 42 )  
இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ 
( 43 )  
"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ 
( 44 )  
நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 
( 45 )  
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ 
( 46 )  
(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 
( 47 )  
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ 
( 48 )  
'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 
( 49 )  
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ 
( 50 )  
எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?